தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்தது தவறு- பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

 

தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்தது தவறு- பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

இஸ்லாமியர்களுக்கு ரமலான் உதவி பொருட்கள் தரும் நிகழ்வு தேமுதிக சார்பில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அரசு சொல்லும் வழிமுறைகள் பின்பற்றினால், சென்னை ரெட் zone இருந்து green zone விரைவில் வரும். மனித நேயம் தான் வெல்லும் என கொரோன மக்களுக்கு கற்று தந்துள்ளது. பலரும் கஷ்டப்படும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள், ஏழை மக்களுக்கு உதவும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்தது தவறு- பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
தமிழக அரசு மிக சிறப்பாக கொரோன தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்து இருக்கலாம். அந்த ஒரு செயல்பாட்டை தவிர்த்து மற்ற விஷயங்கள் சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறையும் சிறப்பாக செயல்படுகிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தால், இதை விட சிறப்பாக என்ன செய்து விடப் போகிறார்கள்?அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வருவது வரவேற்க தக்கது” எனக்கூறினார்.