சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும்- பிரேமலதா விஜயகாந்த்

 

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும்- பிரேமலதா விஜயகாந்த்

மதுரை செல்லூரில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வரும் சட்டமன்ற தேர்தல் தேமுதிகவிற்கு மாபெரும் வெற்றி தேர்தலாக இருக்கும் என்பது உறுதி. தேர்தல் நேரத்தில் தேமுதிக தலைவர் நிச்சயமாக மக்களை சந்திப்பார். வரும் தேர்தல் நாம் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். பொறுத்திருங்கள் நல்லாட்சியும் மக்களாட்சியும் மலரும். வரும் காலத்தில் தமிழகத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை தேமுதிக உருவாக்கும்” எனக் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும்- பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து மதுரையில் தேமுதிகவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக கூட்டணியில் குழப்பங்களும் மாற்றுக் கருத்தும் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் மட்டும் அல்ல , திமுக கூட்டணியும் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தேர்தல் நேரத்தில் தான் யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து இறுதி செய்யப்படும். சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிப்பெறும்” எனக் கூறினார்.