பிரேமலதா விருப்ப மனு தாக்கல் : எந்த தொகுதியில் போட்டி?

 

பிரேமலதா விருப்ப மனு தாக்கல் : எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருப்ப மனு தாக்கல் செய்தார்.

பிரேமலதா விருப்ப மனு தாக்கல் : எந்த தொகுதியில் போட்டி?

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.எந்த தொகுதியில் போட்டி என குறிப்பிடாமல் தீர்ப்பை மனுவை அளித்துள்ளார் பிரேமலதா. இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

பிரேமலதா விருப்ப மனு தாக்கல் : எந்த தொகுதியில் போட்டி?

தேமுதிக விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபாஸ்கரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்தனர். விருதாச்சம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்த அவர்கள், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூரில் விஜயபிரபாகரனும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இதனால் பிரேமலதா தொண்டர்களின் எண்ண ஓட்டத்தை கருத்தில் கொண்டு விருகம்பாக்கத்தில் களம்காண்பார் என்று கூறப்படுகிறது.