தேமுதிக தோல்வியை கண்டு துவண்டு போவாது- பிரேமலதா விஜயகாந்த்

 

தேமுதிக தோல்வியை கண்டு துவண்டு போவாது- பிரேமலதா விஜயகாந்த்

வெற்றியை கண்டு ஆணவம் படுவதோ, தோல்வியை கண்டு துவண்டு போவது தேமுதிகாவிற்கு கிடையாது என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தோல்வியை கண்டு துவண்டு போவாது- பிரேமலதா விஜயகாந்த்

மதுரையில் மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது, தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 5-ஆம் தேதி மத்திய, மாநில அரசை கண்டித்து தேமுதிக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தேமுதிக கட்டமைப்பு என்றும் வலிமை மிக்கது, அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். வெற்றியை கண்டு ஆணவம் படுவதோ, தோல்வியை கண்டு துவண்டு போவது தேமுதிகாவிற்கு கிடையாது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கும் விஜயகாந்திற்கு என்றைக்குமே நட்புறவு இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் ஆலோசனை கூட்டம் கூடி தங்களில் நிலைபாட்டை தலைமை அறிவிக்கும்” என கூறினார்.