காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை!

 

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை!

ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண், தனது பிறந்தநாளன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ்- மீனாட்சி தம்பதியினர். இவர்களுக்கு பூரணி, சண்முகப்பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கோபியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சண்முகபிரியாவுக்கு, உடன் பணிபுரிந்த பா.நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காட்டையை சேர்ந்த ராஜ் மகன் மலைச்சாமியுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்தது.

இதனை அறிந்த பெற்றோர் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வினிகா என்ற மகள் உள்ளார். சண்முகபிரியா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் சண்முகப்பிரியா, தனது மகளை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை!

இந்த நிலையில், நேற்று சண்முகப் பிரியாவுக்கு பிறந்தநாள் என்பதால், அவரது தாயார், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மகளுடன் அங்கு சென்ற சண்முகப்பிரியா, தனது அக்கா பூரணியிடம், மகளுக்கு கடையில் உணவு வாங்கி வருமாறு கூறி உள்ளார். அவர் கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சண்முகப்பிரியா விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சண்முகப்பிரியாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.