அரியலூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

 

அரியலூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

அரியலூர்

அரியலூர் அருகே 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழகுடிருயிப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் இந்துமதி (24). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விக்கிரமங்கலம் அடுத்த கீழநத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரகாஷ் வெல்டராக பணிபுரிந்து வருகிறார்.

அரியலூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த இந்துமதி, 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம், ராஜேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்ட பிராபகரன் குடும்பத்தினர், இந்துமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த இந்துமதியின் உறவினர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், கணவர் வீட்டார் மீது நவடடிக்கை எடுக்கவும் கோரி விக்கரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.