குடும்ப தகராறு காரணமாக கர்ப்பிணி 2 குழந்தைகளுடன் தற்கொலை!

 

குடும்ப தகராறு காரணமாக கர்ப்பிணி 2 குழந்தைகளுடன் தற்கொலை!

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் தனது 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 3 பேரும் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மணியார் பாளையம் அருகே உள்ள கீழாத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் புவனா என்ற 5 வயது மகளும் யமுனா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். நேற்று இரவு ஈஸ்வரனும் அவரது மனைவி ரேவதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

குடும்ப தகராறு காரணமாக கர்ப்பிணி 2 குழந்தைகளுடன் தற்கொலை!

இன்று காலை ரேவதியும் அவரது குழந்தைகள் புவனா, யமுனா ஆகிய மூவரும் அங்குள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் கரியாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் குறித்து கரியாலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். மூன்று பேரின் உயிர் இழப்பால் அக்கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இறந்துபோன ரேவதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்ப சண்டைக்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.