“அல்லாவுக்காக பலி கொடுத்தேன்”… மகனை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்!

 

“அல்லாவுக்காக பலி கொடுத்தேன்”… மகனை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்!

மூட நம்பிக்கையால் 30 வயதான பெண் ஒருவர் தனது மகனைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையும் செய்துவிட்டு, அல்லாவுக்காக தனது மகனின் உயிரைப் பலியாக்கியதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது காவல் துறையினரேயே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“அல்லாவுக்காக பலி கொடுத்தேன்”… மகனை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்!

கொலைசெய்த பெண்ணான சஹிதா கேராள மாநிலம் பாலக்காட்டிலுள்ள ஒரு மதராஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள சஹிதாவுக்கு ஒரு கணவரும் மூன்று ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் கடைக்குட்டி சிறுவனை நேற்று நள்ளிரவு குளியறைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் படுக்கறையில் இருந்ததால் இது யாருக்கும் தெரியவில்லை. குளியலறைக்குச் சென்றபின் மகனின் கால்களைக் கட்டிப் போட்டு, வாயைக் துணியைக் கொண்டு அடைத்துள்ளார். அதன்பின், மகனைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாக நரபலி கொடுத்துள்ளார்.

“அல்லாவுக்காக பலி கொடுத்தேன்”… மகனை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்!

இதையடுத்து அதிகாலை 4 மணிக்கு 112 காவல் அவசர மையத்துக்கு போன் செய்து மகனைக் கொன்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார். அல்லாவுக்காக தனது மகனின் உயிரைப் பலிகொடுத்ததாகவும் தெரிவித்து அதிர்ச்சியூட்டிருக்கிறார். உடனே சம்பவ இடம் விரைந்த பாலக்காடு காவல் துறையினர், குளியறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி, சஹிதாவைக் கைதுசெய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவுசெய்துள்ள காவல் துறையினர் கூறுகையில், “சஹிதா கூறியதை வைத்து முதல் தகவல் அறிக்கை பதியப்ப்பட்டுள்ளது. அந்தக் காரணத்திற்காக மகனைக் கொலை செய்தாரா? வேற காரணங்களுக்காகக் கொலை செய்தாரா என்பது மேற்கொண்ட விசாரணையில் தெரியவரும்”என்றனர்.

“அல்லாவுக்காக பலி கொடுத்தேன்”… மகனை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்!

அக்கம்பக்கத்தில் விசாரிக்கையில், சஹிதா கொலை செய்வதற்கு ஒருநாள் முன்னர் (பிப்.6) அருகிலிருக்கும் காவல் நிலைய எண்ணைக் கேட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இது திட்டமிட்டு அரங்கேறிய கொலையா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் சித்தூரில் கல்லூரியின் துணை முதல்வரான தந்தையும், பேராசிரியரான தாயும் தங்களது இரு மகள்களை நரபலி கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதே காரணத்திற்காக பெண் ஒருவர் தனது மகனைக் கொலை செய்திருக்கிறார்.