குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

விருதுநகர்

ராஜபாளையம் அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாலதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த கனிராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், மாலதிக்கும், கனிராஜுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாலதி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதுகுறித்து, அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சேத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து மாலதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேத்தூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 7 மாதத்தில் பெண் உயிரிழந்ததால், தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.