ஆட்சிக்கு வரப்போவது யார்? பிலவ பஞ்சாங்கத்தின் கணிப்பு!

 

ஆட்சிக்கு வரப்போவது யார்? பிலவ பஞ்சாங்கத்தின் கணிப்பு!

தமிழ் புத்தாண்டான இன்று பஞ்சாங்கம் படித்து பிலவ ஆண்டு பலன் சொல்லப்பட்டதில் தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக பட்டாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு வருட பிறப்பையொட்டி, சேலம், அம்மாப்பேட்டை, சவுந்திர ராஜ பெருமாள் கோவிலில் பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி உள்ளிட்டோர் பிலவ ஆண்டுக்கான பஞ்சாங்க பலனை படித்தனர்.

ஆட்சிக்கு வரப்போவது யார்? பிலவ பஞ்சாங்கத்தின் கணிப்பு!

அதன்படி, “புத்தாண்டின் ராஜாவாக பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால் நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும். பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் ஏற்றம் பெறுவர். புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்தாண்டை போன்று, நடப்பாண்டும் புதுப்புது வைரஸ் உருவாகும். கால்நடைகளுக்கு வியாதிகள் ஏற்படும். மருத்துவ துறையில் பல சாதனைகள் நடந்து வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்கும்.

கல்வித்துறையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும். அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும். இந்தாண்டில் 12 புயல் உருவாகும். இவற்றில் ஒன்பது புயல் இந்தியாவை தாக்கும். புயல் வேள்ள்ளத்தால் சென்னை மிதக்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.