‘ஸ்டாலின் சிஎம் ஆக விரலை துண்டித்து கொண்ட தொண்டர்’… முரட்டு நேர்த்தி கடனால்ல இருக்கு…!

 

‘ஸ்டாலின் சிஎம் ஆக விரலை துண்டித்து  கொண்ட தொண்டர்’… முரட்டு நேர்த்தி கடனால்ல இருக்கு…!

தமிழகமே உற்று நோக்கக் நோக்கிக் கொண்டிருக்கின்றது ஒன்று சட்டசபை தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக மூன்றாவது முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக அரியணை ஏற முடியாமல் தவித்து வரும் திமுகவோ இந்த முறை எப்படியாவது முதல்வர் நாற்காலியை கைப்பற்றிவிட வேண்டும் என்றும் கடுமையாக உழைத்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிகமுக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் தமிழகத்திற்கு மிகவும் பரிட்சயமான ஸ்டாலின் இந்த முறை முதல்வர் வேட்பாளராக முதல் முறையாக களமிறங்குகிறார்.

‘ஸ்டாலின் சிஎம் ஆக விரலை துண்டித்து  கொண்ட தொண்டர்’… முரட்டு நேர்த்தி கடனால்ல இருக்கு…!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை நடத்திய திமுக தொண்டர் ஒருவர் இடது கை சுண்டு விரலை துண்டித்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமல்ல சென்னை அறிவாலயம் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் குருவையா. 66 வயதான இவர் திமுக தொண்டர் ஆவார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தோல்வி அடைந்துவிட்டது. இந்த தேர்தல்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு குருவையா திமுக வெற்றி பெறவேண்டும் என்று கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கமாம். ஆனால் இந்த 2 தேர்தல்களிலும் திமுக தோற்றுவிட்டது குருவையாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்துள்ளது.

‘ஸ்டாலின் சிஎம் ஆக விரலை துண்டித்து  கொண்ட தொண்டர்’… முரட்டு நேர்த்தி கடனால்ல இருக்கு…!

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று வேண்டிக்கொண்ட குருவையா இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பதற்கு பதிலாக தனது இடது கை விரலை துண்டித்து உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.