எஸ்.பி.பி உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது: தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத்

 

எஸ்.பி.பி உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது: தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத்

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு சென்று எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

எஸ்.பி.பி உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது: தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத்

அவரை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத், எம்.ஜி,எம் மருத்துவமனை என்று எஸ்.பி.பி. நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது மோசமாக உள்ளது, ஆனால் எஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார். அவரது நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. அனைத்து மருத்துவர்களும் அவரை கண்காணித்து வருகின்றனர். அவர் நலமுடன் திரும்ப அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்” எனக் கூறினார்.