அதிர்வுகளை கொடுக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரம்!

 

அதிர்வுகளை கொடுக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரம்!

பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகிறார் சிவபெருமான். இவர் தனது உடலின் ஒரு பகுதியை அன்னை பராசக்திக்கு கொடுத்து சிவமும் சக்தியும் ஒன்றுதான் என உருவாக்கினார் சிவபெருமான்.

அதிர்வுகளை கொடுக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரம்!

சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை. சிவ சக்தி கலப்பே உலகம். அதுவே விந்து நாத தத்துவம். சிவசக்தி சேர்க்கையே உலக இயக்கத்திற்கு காரணமாய் அமைவது ஆகும். இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசாரங்களை உருவாக்கினார்கள். தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார்கள்.

ஓம் என்னும் சொல்லை நாம் பல முறை நம்முள் கூறும் போது, மனிதருக்குள் இருக்கும் அசுரத்தன்மை வெளியேறும். ஓம் என்ற சொல்லை உள்ளுணர்வோடு நீண்டு கூறுவது முக்கியம். முனிவர்கள், சித்தர்கள் முதற்கொண்டு அனைத்து வகையான உயிரினங்களும் ஓம் என்ற பேரொளியை எழுப்பி தன் தவப்பயனை எட்டியுள்ளதற்கு பல சான்றுகள் நம் புராணங்களில் உள்ளது. இந்த ஓம் என்ற சொல் இந்து மதத்திற்கானது மட்டுமல்ல மனிதருக்கானதும்தான்.

அதிர்வுகளை கொடுக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரம்!

ஓம் எனும் உச்சரிப்பு தனித்துவமானது. இதற்கு‘பரம்பொருளே’ ஜீவனாகிய என்னை உன்னோடு இணைத்துக் கொள்’என்று பொருள். ஆகையினாலே நாம் கடவுள் பெயரை உச்சரிக்கும் முன் ஓம் சக்தி,

ஓம் நமசிவாய,

ஓம் முருகா,

ஓம் குருநாதா,

ஓம் நமோ நாராயணா, என்று அழைக்கிறோம்.

இந்தப் பிரபஞ்சமே ஓம் எனும் அச்சாணியில் தான் சுழல்கிறது. ஆகவே ஓம் என்று சொல்லும் போதெல்லாம் பஞ்சபூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி மற்றும் காந்த சக்தியை உருவாக்குகிறது. ஓம் என்ற சொல்லை அ+உ+ம் என்று உச்சரிக்கின்றோம். அஅஅ என்று உச்சரிக்கையில் நம் வயிற்று மற்றும் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் ஒருவிதமான அதிர்வு உண்டாகிறது.

‘ம்ம்ம்’என்று சொல்லும் போது மூக்கு, தலை மற்றும் மூளை பகுதியிலும் அதிர்வு ஏற்படுகின்றது.

அதிர்வுகளை கொடுக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரம்!

இறுதியாக அ+உ+ம் மூன்றினையும் இணைத்து ‘ஓம்’ என்று உச்சரிக்கையில் நம் மூக்கு,தொண்டை,வயிறு,மற்றும் மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. ஓம் என்ற ஒலியினால் உருவாகும் சக்தி இவ்விடங்களை எப்போதும் புதுப்பித்து பாதுகாக்கின்றது.

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! ஓம் நமசிவாய!!!

  • வித்யா ராஜா