பிரணாப் முகர்ஜி மறைவு :தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

 

பிரணாப் முகர்ஜி மறைவு  :தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசால்7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பிரணாப் முகர்ஜி மறைவு  :தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

பிரணாப் முகர்ஜி மறைவு  :தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

அவருக்கு வயது 84. பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சபாநாயாகர் ஓம்பிர்லா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பிரணாப் முகர்ஜி மறைவு  :தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் 6 வரை தமிழகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் எந்த அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழக பொதுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.