மதுரையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு! இறப்புக்கு பின் கொரோனா இருப்பது உறுதி…
Jun 24, 2020, 21:09 IST1593013153000
மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று மாலை முதல் மதுரை மாவட்டம் வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அவருக்கு கொரோனோ தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த 7 மாத கர்ப்பிணி (வயது 34) பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 3 தினங்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்தார் இதனிடையே முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொரோனோ பரிசோதனை முடிவு கர்ப்பிணி பெண் உயிரிழந்தததற்கு பின் வெளியான நிலையில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.