டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த விசைத்தறி தொழிலாளி… போலீசார் விசாரணை…

 

டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த விசைத்தறி தொழிலாளி… போலீசார் விசாரணை…

கோவை

கோவை அருகே விசைத்தறி தொழிலாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள ராமாச்சி பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை கடையின் அருகே ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த விசைத்தறி தொழிலாளி… போலீசார் விசாரணை…

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர் கருமத்தம் பட்டியை சேர்ந்த செந்தில் (40) என்பதும், அவர் விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.