வீட்டில் முடங்கிய மக்கள் : அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 

வீட்டில் முடங்கிய மக்கள்  : அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஊரடங்கும் மற்றும் கோடை காலம் தொடங்கிய நிலையில் மின் கட்டமைப்பு மேலாண்மை தடையில்லா மின்சாரம் வழங்குதல் முதல் மின்வெட்டு மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

வீட்டில் முடங்கிய மக்கள்  : அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின் வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் சிறப்பு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மேற்பார்வை பொறியாளர் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

வீட்டில் முடங்கிய மக்கள்  : அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கோடை மழை பெய்து வருவதால் மின் தேவைகள் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் கடந்த 6 மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், தற்போது காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்காலிகத் தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். பொதுமக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார்கள் தெரிவிக்க 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் மின்தடை பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்அப் செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தல் நடைமுறைகளைப் பின்பற்றி பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் கையுறை மற்றும் சான்றிதழ் வழங்குமாறும் மின்சாரம் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.