திருச்சியில் கோழி விற்பனையாளர் பாட்டிலால் குத்திக் கொலை!

 

திருச்சியில் கோழி விற்பனையாளர் பாட்டிலால் குத்திக் கொலை!

திருச்சி

திருச்சி பாலக்கரையில் முன் விரோதமாக கோழி விற்பனையாளர் பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவருடன் இணைந்து கோழி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஶ்ரீதர் என்பவருக்கும் கோழி விற்பனை செய்வது தொடர்பாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் மணிகண்டன், ஶ்ரீதரை தாக்கியதாக கூறப்படுகிறது.

திருச்சியில் கோழி விற்பனையாளர் பாட்டிலால் குத்திக் கொலை!

இதில் லேசான காயமடைந்த ஶ்ரீதர், இதுகுறித்து தனது அண்ணன் கமலக்கண்ணன் என்பவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, கமலகண்ணன், அவரது கூட்டாளி தங்கமுத்து ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தாக்கி உள்ளனர். அப்போது, மதுபாட்டிலை உடைத்து மணிகண்டனின் வயிற்றில் குத்தியதில், அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கமலகண்ணன், தங்க முத்து ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.