புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு

 

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவல் கடந்த மாதங்களில் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுச்சேரி பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகள் வரும் 19 ஆம் தேதிகள் தொடங்கவிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மறு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் தெரிவித்துள்ளார்.