‘டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவையுங்கள்’ : அன்புமணி கோரிக்கை!!

 

‘டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவையுங்கள்’ : அன்புமணி  கோரிக்கை!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

‘டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவையுங்கள்’ : அன்புமணி  கோரிக்கை!!

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையில் அலுவலர்கள், உதவி இயக்குனர்கள் 991 பேரை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாட்களில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று #TNPSC அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இத்தேர்வுகளை நடத்துவது உகந்தது அல்ல!

கொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலும், போட்டித் தேர்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேளாண் அலுவலர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-க்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.