கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

 

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார்.

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக உள்ள இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, சகஜ நிலை திரும்பிய பின்னர் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்காக மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.