அ.தி.மு.க-வை புறக்கணிக்கும்படி போஸ்டர்! – திண்டுக்கல்லில் அதிர்ச்சி

 

அ.தி.மு.க-வை புறக்கணிக்கும்படி போஸ்டர்! – திண்டுக்கல்லில் அதிர்ச்சி

அ.தி.மு.க-வை புறக்கணிக்கும்படி போஸ்டர்! – திண்டுக்கல்லில் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வை புறக்கணிக்கும்படி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதுடன் அ.தி.மு.க-வுக்கு சவால் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை மற்றும் பல பகுதிகளில் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வை புறக்கணிப்போம் என்று தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வை புறக்கணிக்கும்படி போஸ்டர்! – திண்டுக்கல்லில் அதிர்ச்சி


கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் படங்களுடன் தேவேந்திர குல வேளாளர் சங்கம் நிலக்கோட்டை தொகுதி மக்கள் என்று ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “அ.தி.மு.க-வே கடந்த தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை நிறைவேற்றுவோம் என பொய்யான வாக்குறுதி கொடுத்த அரசே, இன்று வரை அரசாணை வெளியிடாமல் ஏமாற்றி வருவதுடன் நிலக்கோட்டை தொகுதியில் அதிகம் உள்ள எங்கள் சமுகத்திற்கு ஒன்றிய செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் தராமல் ஏமாற்றும் அ.தி.மு.க-வை வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் புறக்கணிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நலக்கோட்டை ஒன்றிய அதிமுக தேவேந்திரகுல வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள மற்றொரு போஸ்டரில், “தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய அதிமுக தேவேந்திரகுல வேட்பாளர்களின் நெஞ்சில் கத்தி

குத்தியதைப் போல் செயல்பட்ட நிலக்கோட்டை ஒன்றியம் அளவில் தேவேந்திர குல வேட்பாளர்களாகிய எங்களில் ஒருவரை பொறுப்பாளராக அறிவிக்காமல் வெறுத்து நிராகரித்த அதிமுக கட்சியை நாங்கள் நிராகரிக்கிறோம். 2021 சட்டமன்ற தேர்தலில் முடிந்தால் எந்த ஒரு வேட்பாளரையும் நிறுத்தி ஜெயித்துப் பார்” என்று என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க-வில் சீட் வாங்குவதற்கான யுக்தி, இப்படி போஸ்டர் அடித்து அ.தி.மு.க தலைமையின் கவனத்தைப் பெற முயற்சிக்கிறார்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்கான உரிய அங்கீகாரம் அ.தி.மு.க-வில் வழங்கப்பட்டு உள்ளது என்று கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த போஸ்டர் அந்த பகுதியில் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.