சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் : அதிமுகவிலிருந்து மேலும் ஒருவர் நீக்கம்!

 

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் : அதிமுகவிலிருந்து மேலும் ஒருவர் நீக்கம்!

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்ததால் அதிமுகவில் இருந்து மேலும் ஒருவர் நீக்கப்பட்டார்.

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் : அதிமுகவிலிருந்து மேலும் ஒருவர் நீக்கம்!

அதிமுக அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் , திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி (மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் ” என்று தெரிவித்துள்ளனர்.

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் : அதிமுகவிலிருந்து மேலும் ஒருவர் நீக்கம்!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை, ‘33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார். ஏற்கனவே நெல்லை அதிமுகவை சேர்ந்த சுப்ரமணிய ராஜாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.