கொழுந்தியாள் மீது காதல் -மனைவியோடு மோதல் -அடுத்து நாலு பேர் பலியான கொடுமை

 

கொழுந்தியாள் மீது காதல் -மனைவியோடு மோதல் -அடுத்து நாலு பேர் பலியான கொடுமை

கொழுந்தியாள் மீது கொண்ட காதல் தகராறில் ஒருவர் தன்னுடைய குடும்பத்திலிருந்த நாலு பேரை கொலை செய்துள்ளார்

கொழுந்தியாள் மீது காதல் -மனைவியோடு மோதல் -அடுத்து நாலு பேர் பலியான கொடுமை


நாக்பூரில் 36 வயதான மாதுர்கர் என்பவர் விஜயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இருவருக்கும் பரி மற்றும் சாஹில் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறது .இந்நிலையில் விஜயாவின் தங்கை அமிஷா போப்டே சமீபத்தில் மாதுர்கருக்கு தையல் வேலைகளில் உதவ அவரின் வீட்டிலேயே தங்கினார், ஆனால் அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு உதவுவதை நிறுத்திவிட்டார் .மேலும் அந்த மாதுர்கற்கு அவரின் கொழுந்தியாள் போப்டே மீது காதல் இருந்துள்ளது .அதனால் மாதுர்கர் அந்த பெண் மற்ற ஆண்களிடம் பேசுவதை தடை போட்டு அவரை டார்ச்சர் செய்தார் .இதனால் அந்த பெண் அவர் மீது ஏற்க்கனவே போலீசில் புகார் கொடுத்துள்ளார்
இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் அந்த நபருக்கும் அவரின் கொழுந்தியாள் மற்றும் மனைவிக்கும் இந்த காதல் விவகாரத்தில் சண்டை வந்தது .அதனால் ஆத்திரமடைந்த மாதுர்கர் அன்று இரவு அந்த வீட்டிலிருந்த அவரின் மனைவி ,கொழுந்தியாள் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோரை கத்தியால் வெட்டி கொலை செய்தார் .பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். .மறுநாள் அக்கம்பக்கத்தினர் வீட்டில் நால்வரும் இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .