“குழந்தையை கடத்த இப்படியெல்லாமா நாடகம் போடுவிங்க” -தம்பதிகளின் மோசடி அம்பலம்

 

“குழந்தையை கடத்த இப்படியெல்லாமா நாடகம் போடுவிங்க” -தம்பதிகளின் மோசடி அம்பலம்

அங்கன்வாடி ஊழியர் என்று பொய் சொல்லி குழந்தையை கடத்திய தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்

“குழந்தையை கடத்த இப்படியெல்லாமா நாடகம் போடுவிங்க” -தம்பதிகளின் மோசடி அம்பலம்

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் சந்திராவதி மற்றும் அவரது கணவர் வீரேந்தர் ஆகிய இருவரும் குழந்தை கடத்தலை நூதனமான முறையில் செய்து வந்தனர் .அவர்கள் பல குழந்தைகளை கடத்தி குழந்தையில்லா தம்பதிகளுக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தனர் .

அதன் படி அவர்கள் கடந்த வாரம் மேற்கு டெல்லியின் மோதி நகர் பகுதியில் வசித்த ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதை கேள்விப்பட்டு அந்த குழந்தையை கடத்த அவர்கள் வீட்டிற்கு சென்றனர் .அப்போது அவர்கள் தாங்கள் அங்கன்வாடி ஊழியர் என்று பொய் சொல்லி ,அந்த பெண்ணின் குழந்தையை அங்குள்ள அரசு ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டி சென்றனர் .அங்கு அந்த குழந்தைக்கு மருந்துகள் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி குழந்தையை போட்டோ எடுப்பதாக கூறி தூக்கி சென்று விட்டனர் .அதன் பிறகு அந்த குழந்தையின் தாய் தன் குழந்தையை தூக்கி சென்றவர்கள் திரும்ப கொண்டு வந்து தராததால் பயந்து போய் அங்கு விசாரித்தார்  .அப்போது அவர்கள் போலியானவர்கள் என்று தெரிந்துகொண்டு ,குழந்தை கடடத்தப்பட்டதை கண்டு ,போலீசில் புகாரளித்தார் .போலீசார்  வழக்கு பதிந்து விசாரித்து அந்த இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் . பிறகு அவர்கள் கடத்திய குழந்தை அந்த தாயிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது ,