50 பெண்களிடம் ஆபாச பேச்சு…சிக்கிய 560 குரல் பதிவுகள் : திருமணமான பெண்களை குறி வைத்த இருவர் கைது!

 

50 பெண்களிடம் ஆபாச பேச்சு…சிக்கிய 560 குரல் பதிவுகள் : திருமணமான பெண்களை குறி வைத்த இருவர் கைது!

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டுகால் வந்துகொண்டிருந்தது. இதையடுத்து அந்த பெண் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசிய ஆண் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தபோது அந்த பெண்ணின் கணவரிடமும் அந்த ஆண் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் தனது நண்பரின் உதவியுடன் செல்போன் எண்ணின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்று அந்த இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போனையும் பறித்து கொண்டு வந்துள்ளார்.

50 பெண்களிடம் ஆபாச பேச்சு…சிக்கிய 560 குரல் பதிவுகள் : திருமணமான பெண்களை குறி வைத்த இருவர் கைது!

வீட்டிற்கு வந்த பிறகு அந்தப் செல்போனை ஆராய்ந்ததில் அந்த செல்போனில் சுமார் ஐம்பது பெண்களிடம் 560 ஆபாச குரல் பதிவுகள் பேசி அப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக இதுகுறித்து அந்த நபரும் அவரது மனைவியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மலை கிராமமான நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் நரசிம்மன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

50 பெண்களிடம் ஆபாச பேச்சு…சிக்கிய 560 குரல் பதிவுகள் : திருமணமான பெண்களை குறி வைத்த இருவர் கைது!

இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மலை கிராமத்தில் இருந்து கொண்டு வாட்ஸ் அப்பில் புகைப்படம் வைத்துள்ள பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு தெரியாமல் போன் செய்வது போல் செய்து அவர்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். பின்பு அதை பதிவு செய்து கொண்டுமிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

50 பெண்களிடம் ஆபாச பேச்சு…சிக்கிய 560 குரல் பதிவுகள் : திருமணமான பெண்களை குறி வைத்த இருவர் கைது!

இவர்களின் இச்சைக்கு யாரும் கிடைக்கவில்லை என்றால் செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.