பிரபல செய்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல்

 

பிரபல செய்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல்

சென்னை சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்.

பிரபல செய்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல்

சென்னை ராயபுரத்தில் உள்ள சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (03-08-2021 ) மாலை சுமார் 6.45 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் பெரிய பட்டாக்கத்தி உடன் உள்ளே நுழைந்துள்ளார். அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறி அலுவலகத்தின் அலங்கார கண்ணாடிகள் உள்ளிட்ட அனைத்தையும் கையில் இருந்த பட்டாக்கத்தியால் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி உள்ளார். அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் போலீசார் மர்ம நபரை பிடித்து சென்றனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பிரபல செய்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல்

டெல்லியிலிருந்து கார் மூலமாக ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி வந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து நீண்ட வாள் கேடயம், இரண்டு லேப்டாப், கார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.