பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான் – பூரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

 

பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான் – பூரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

‘பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்’ என்று பூர நட்சத்திரம் பற்றி ஒரு வாக்கு உள்ளது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம் கொண்டிருப்பார்கள். யதார்த்தமாக இருக்கும் அதேசமயத்தில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். எப்போதும் ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். பிறருக்கு உதவும் இரக்க குணம் இவர்களிடத்தில் இருக்கும். காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டாலும், வருத்தம் தெரிவிக்க யோசிக்க மாட்டார்கள். எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். காரியத்தில் கண்ணாக இருப்பதுடன் எதிரிகளை வெற்றி பெறும் வல்லமை பெற்றிருப்பார்கள். பூர நட்சத்திரக்காரர்கள் மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பார்கள்.

பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான் – பூரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

எந்த நிலையிலும் நேர்மைக்கும், சத்தியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுயமாக முன்னேறுவதற்காக கடுமையாக உழைப்பார்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்க மாட்டார்கள். அதேபோல மற்றவர்கள் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டார்கள். வெட்டியாக இருப்பவர்களை கண்டால் அறவே பிடிக்காது. தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பார்கள். அதிகமாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.