‘ஐசியுவில்’ திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா: மருத்துவமனை தகவல்!

 

‘ஐசியுவில்’ திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா: மருத்துவமனை தகவல்!

உட்கட்சி பூசலால் தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது

‘ஐசியுவில்’ திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா: மருத்துவமனை தகவல்!

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சரான ஆலடி அருணா, ஆலங்குளம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவரது தந்தையும் அதே தொகுதியில் 3 முறை திமுக எம்எல்ஏவாக இருந்தவர். இவ்வாறு குடும்பமாக திமுக மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அருணா, தற்போது திமுகவில் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

‘ஐசியுவில்’ திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா: மருத்துவமனை தகவல்!

இந்த நிலையில் தான், இன்று பிற்பகல் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட பத்மநாபன் மற்றும் துரை உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பூங்கோதை பேசவிருந்த போது, மைக்கை பிடுங்கி வைத்துக் கொண்டு மற்றவர்கள் சிரித்ததாலும், உரிய மரியாதை கொடுக்காததாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

‘ஐசியுவில்’ திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா: மருத்துவமனை தகவல்!

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பூங்கோதை ஆலடி அருணா ஐசியுவில் வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயக்க நிலையில் கொண்டு வரப்பட்ட அவர் தற்போது விழிப்போடு இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.