இன்று மாலை திறக்கப்படும் பூண்டி ஏரி : வெள்ள அபாய எச்சரிக்கை!

 

இன்று மாலை திறக்கப்படும் பூண்டி ஏரி : வெள்ள அபாய எச்சரிக்கை!

பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது

இன்று மாலை திறக்கப்படும் பூண்டி ஏரி : வெள்ள அபாய எச்சரிக்கை!

நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு ஏரி குளங்கள் நிரம்பின. இதனால் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திறக்கப்பட்டு அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.

இன்று மாலை திறக்கப்படும் பூண்டி ஏரி : வெள்ள அபாய எச்சரிக்கை!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்படுகிறது. விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.