நரிக்குறவர் சமூகத்தினருக்கு நகராட்சி சார்பில் மருந்து, உணவு விநியோகம்

 

நரிக்குறவர் சமூகத்தினருக்கு நகராட்சி சார்பில் மருந்து, உணவு விநியோகம்

சென்னை

பூந்தமல்லியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு, நகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மருந்து மற்றும் உணவு வழங்கப்பட்டது.

நரிக்குறவர் சமூகத்தினருக்கு நகராட்சி சார்பில் மருந்து, உணவு விநியோகம்

சென்னை பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். நிவர் புயலால் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மழையால் அவர்களுக்கு காய்ச்சல் ஏதும் ஏற்படாமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

நரிக்குறவர் சமூகத்தினருக்கு நகராட்சி சார்பில் மருந்து, உணவு விநியோகம்


இதில், இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதித்து, அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேலும், அனைவருக்கும் உணவு பொட்டலங்களை வழங்கிய அதிகாரிகள், அவர்களது அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தனர்.