பூந்தமல்லியில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

 

பூந்தமல்லியில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

சென்னை

சென்னை பூந்தமல்லியில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி சி.டி.எச் சாலை அருகே ருக்மணிநகர் நகர் செல்லும் வழியில் ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து இன்று காலை திடீரென கரும்புகை வெளியாகி உள்ளது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பூந்தமல்லியில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

அதற்குள் தீ மளமளவென பரவிய ஏடிஎம் மையம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி மற்றும் மதுவாயல் தீயணைப்புத்துறை வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏடிஎம் இயந்திரம் முழுமையாக எரிந்த நிலையில், அதன் உள்ளே இருந்த பணம் முழுவதும் எரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர்.

பூந்தமல்லியில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்ட பின்னரே எவ்வளவு பணம் எரிந்தது என்ற விபரம் தெரியவரும் எனவும் அவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததுள்ளது