சமந்தா அவ்வளவு ஒன்றும் அழகில்லை – பூஜா ஹெக்டே

 

சமந்தா அவ்வளவு ஒன்றும் அழகில்லை – பூஜா ஹெக்டே

ஊரடங்கால் அனைத்து நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் சமூக வலைதளத்தில் அதிக நாட்டத்தை காட்டிவருகின்றனர். தினந்தினம் செல்பி எடுத்து பதிவிடுவது, தன்னுடைய ஊரடங்கு நேரத்தை பெற்றொரிடம் செலவிடுவது போன்ற புகைப்படத்தை பதிவிடுவது, குழந்தை பருவ புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்காக நடிகை சமந்தாவிடம் பூஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

சமந்தா அவ்வளவு ஒன்றும் அழகில்லை – பூஜா ஹெக்டே
முகமூடி படத்தில் நடித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், சமந்தா அவ்வளவு அழகாக ஒன்றும் இல்லை என பதிவிடப்பட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டிருப்பதாக பூஜா ஹெக்டே ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “எனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். கடந்த சில மணிநேரங்களில் வந்த பதிவுகளை தவிர்த்துவிடுங்கள்” என்று விளக்கமளித்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் பதிவிட்ட பதிவில் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை தனது டெக்னிக்கல் டீம் மீட்டு சரிசெய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக காரணம் கூறினாலும் சமந்தாவின் ரசிகர்கள் அவரை விட்டபாடில்லை. ரசிகர்கள் ட்விட்டரில் போர் நடத்திக் கொண்டிருக்க, தான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தும் விதமாக புதிய புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் சமந்தா.