`மனைவியின் இறப்பை தாங்க முடியவில்லை!’- ஒரு மாதத்தில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்; பெற்றோரை இழந்து தவிக்கும் மகன்

 

`மனைவியின் இறப்பை தாங்க முடியவில்லை!’- ஒரு மாதத்தில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்; பெற்றோரை இழந்து தவிக்கும் மகன்

மனைவியின் தற்கொலையால் மனவேதனையில் இருந்த காவலர் ஒருவர், ஒரு மாதத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். பெற்றோரை இழந்து மகன் தவித்து வருகிறார். இந்த சோக சம்பவம் பொன்னேரியில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கெங்குசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் (43). இவர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ஜெயமாலா. இந்தத் தம்பதியினருக்கு ஹரிஸ்ரீராம் என்ற மகன் இருக்கிறார்.

`மனைவியின் இறப்பை தாங்க முடியவில்லை!’- ஒரு மாதத்தில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்; பெற்றோரை இழந்து தவிக்கும் மகன்

இந்தநிலையில் கடந்த 22.5.2020-ல் ஜெயமாலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மீதுள்ள பாசம் காரணமாக துரைமுருகன், மனமுடைந்து காணப்பட்டார். அதனால், முன்பு தங்கியிருந்த வீட்டிலிருந்து பொன்னேரி மதீனாபள்ளி தெருவுக்கு மகனுடன் துரைமுருகன் குடிபெயர்ந்தார். கடந்த 24-ம் தேதி துரைமுருகனின் மகன், பெரியப்பா பாண்டியன் வீட்டில் தங்கினார். 25-ம் தேதி துரைமுருகனுக்கு அவரின் அண்ணன் பாண்டியன் போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து துரைமுருகனின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பொன்னேரி போலீஸார் துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவி இறந்த சோகத்தில் போலீஸ் ஏட்டு துரைமுருகன் தற்கொலை செய்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.