திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொன்னையா பதவியேற்பு
Oct 30, 2020, 17:05 IST1604057758000
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொன்னையா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிகுமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம்
செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா நியமிக்கப்பட்டார். அதனையடுத்து இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொன்னையா, முறைப்படி ஆவணங்களில்
கையெழுதிட்டு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்டோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்புக்கு முன்பாக, அவர் திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில், தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.