பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் 25 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் – தமிழக அரசு

 

பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் 25 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், 2500 ரூபாய் ரொக்கப்பணம் கடந்த 4 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இதனை பெறுவதற்கு வரும் 13-ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் வரமுடியாதவர்கள் வரும் 13ம் தேதி அன்று ரேஷன் கடையில் நேரடியாக சென்று பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் 25 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் – தமிழக அரசு

இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் வாங்க வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2,500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் வரும் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.