“அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு”

 

“அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு”

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ1,000 முதல் ரூ.3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

“அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு”

ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும். பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.