கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பு!

 

கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பு!

கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பு!

இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், ‘கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும். முதுநிலை மற்றும் முதுநிலை இல்லாத அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். 2019-20 வரை 240 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.3,000 போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதே போல, ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கோவில் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.