கொரோனா பாதிப்பு உயர்வு.. ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது புதுச்சேரி!

 

கொரோனா பாதிப்பு உயர்வு.. ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது புதுச்சேரி!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் லட்ச கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,000 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனாவில் இருந்து 48,534க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,000ஐ எட்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு உயர்வு.. ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது புதுச்சேரி!

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. புதுச்சேரியில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 22 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது புதுச்சேரி.