தமிழனின் தன்மானத்தை காக்கும் போராட்டமே வேல் யாத்திரை- பொன். ராதாகிருஷ்ணன்

 

தமிழனின் தன்மானத்தை காக்கும் போராட்டமே வேல் யாத்திரை- பொன். ராதாகிருஷ்ணன்

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வித்யாலயா என்னுமிடத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேடை அனுமதி இல்லாத காரணத்தினால், திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு தொண்டர்களிடையே குஷ்பு பேசினார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னால் மத்திய இணையமைச்சர் பொண்.ராதாகிருஷ்ணன் மற்றும்ம் நடிகை குஷ்பு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழனின் தன்மானத்தை காக்கும் போராட்டமே வேல் யாத்திரை- பொன். ராதாகிருஷ்ணன்

முன்னதாக கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “வேல்யாத்திரை டிசம்பர் 5ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்போது ஊழல் திமுகவுக்கெதிரான சூரசம்ஹாரம் துவங்கும். 8 கோடி தமிழர்களும் கருப்பர்கூட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இது பாஜகவின் போராட்டமோ , அரசியல் போராட்டமோ இல்லை. தமிழனின் தன்மானத்தை காக்கும் போராட்டம். வேல்யாத்திரைக்கு எதிராக தடியாத்திரை நடத்தியவர்கள் மீது வன்முறையை தூண்டியதாக கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் ” எனக் கூறினார்.