கூட்டணிக்கு பிறகு தான் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன்

 

கூட்டணிக்கு பிறகு தான் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக-பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளர் பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நீடித்து வந்த பெருங்குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று காலை அறிவித்தார். அதிமுகவில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவு ஈபிஎஸ்க்கு இருந்ததாகவும் அதனால் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்ஸே போட்டியிட்டும் என ஓபிஎஸ் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது.

கூட்டணிக்கு பிறகு தான் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு: பொன்.ராதாகிருஷ்ணன்

இருப்பினும் இந்த முடிவு அதிமுகவினரிடையே மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே அமைந்திருக்கிறது. இந்த பிரச்னை தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் இருப்பதால் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் தான் போட்டியிடுவாரா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என தற்போதைக்கு சொல்லத் தேவையில்லை என்றும் கூட்டணிக்கு பிறகு தான் அதனை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.