பெண்களை நிர்வாணமாக ஓடச் செய்வதற்கு திமுகவினர் முயற்சி செய்தனர்: பொன். ராதாகிருஷ்ணன்

 

பெண்களை நிர்வாணமாக ஓடச் செய்வதற்கு திமுகவினர் முயற்சி செய்தனர்: பொன். ராதாகிருஷ்ணன்

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் பாஜக வளர்வதைக் கண்டு திமுகவினரின் அடிவயிறு பற்றி எரிகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர முயற்சி. அது நல்ல முறையில் நடைபெறும். வேளாண் சட்டத்தினை எதிர்த்து திமுகவினர் நடத்திய போராட்டம் தோல்வி அடைந்துள்ளது. 15 கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் 100 பேர் கூட வரவில்லை. மக்கள் இன்றைக்கு எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டனர்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், வறுமையில் வாடும் விவசாயிகளின் நிலையை மாற்றி வளம் பொருந்தியதாக மாற்ற வேண்டும் அதற்கு என்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் சரியாக இருக்குமோ, அதற்காக அறிஞர் குழுவை நியமித்து, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு தான் புதிய வேளாண் சட்டம். இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர்

பெண்களை நிர்வாணமாக ஓடச் செய்வதற்கு திமுகவினர் முயற்சி செய்தனர்: பொன். ராதாகிருஷ்ணன்

விவசாயிகள் வைத்து அரசியல் நடத்த விரும்புகிறார்களோ அவர்கள் சட்டத்தை எதிர்க்கின்றனர் டெல்லியில் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓடச் செய்து கேவலப்படுத்தி, அசிங்கபடுத்தியது திமுக. தமிழர்கள் என்றோ விவசாயிகள் என்றோ பார்க்காமல் அரசியல் ஆதாயத்திற்காக அப்படி யாரை வேண்டுமானாலும் நிர்வாணப்படுத்தி ஓட விடுவார்களா? டெல்லியில் விவசாயிகள் நிர்வாணமாக ஓடுவதற்கு முன் பெண்களை நிர்வாணமாக ஓடச் செய்வதற்கு முயற்சி செய்தனர். நான் அவர்களிடம் இது போன்று செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

விவசாயிகளை கொச்சைப்படுத்தியக்கூடியது திமுக கூட்டணி, அவர்கள் கூறுவதை பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது. விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பாஜக கட்சியை ஆளும் கட்சியாக கொண்டுவரக்கூடிய பணி எங்கள் பணி. அதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்” எனக் கூறினார்.