சிறுநீரில் ரத்தம்போவதை நிறுத்தும் மாதுளை!

 

சிறுநீரில் ரத்தம்போவதை நிறுத்தும் மாதுளை!

மாதுளை… நரை, பிணி மூப்பு அகற்றி நீண்டநாள் வாழவைக்கும் மகத்துவம் வாய்ந்தது. மாதுளை என்றதும் பழம் மட்டுமே நம் நினைவில் வரும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக மாதுளம்பழம் இதயத்துக்கு நல்லது என்பதை மட்டுமே அறிந்து வைத்திருப்போம். ஆனால், மாதுளையின் இலை, கொழுந்து, பூ, பிஞ்சு, விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்குமே மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. இங்கே அவற்றின் மருத்துவக் குணம் பற்றி பார்ப்போம்.

சிறுநீரில் ரத்தம்போவதை நிறுத்தும் மாதுளை!
மாதுளைப்பூ:
இன்றைக்கு குழந்தைப்பேறு அதிகரித்து வருகிறது. பல பெண்களுக்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் அதை சரிசெய்யும் வழி தெரியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு மாதுளைப் பூ நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும். மாதுளம்பூவை சுத்தம் செய்து 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் மாதுளை விதை 50 கிராம், மாதுளை மரத்தின் மேல் பட்டை 50 கிராம் எடுத்து வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.

நன்றாகக் காய்ந்த மாதுளை விதை, பட்டை ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடியாக்கி சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றிலும், இரவு தூங்கப்போவதற்கு முன்பும் சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.

சிறுநீரில் ரத்தம்போவதை நிறுத்தும் மாதுளை!

சிறுநீரில் ரத்தம்:
அதிக சூடு அல்லது சைனஸ் பிரச்சினையால் மூக்கில் ரத்தம் வடிபவர்களுக்கு மாதுளைப் பூ நல்ல மருந்து. 4 டீஸ்பூன் சாறு வருமளவு மாதுளைப் பூவை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அதே அளவு அறுகம்புல் சாறும் 2 டீஸ்பூன் தேனும் சேர்க்கவேண்டும். இந்தக் கலவையில் பாதி அளவு சாற்றை காலையிலும் மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து 7 நாள் சாப்பிட்டால் போதும், பிரச்சினை சரியாகும்.

அதிக சூடு காரணமாக சிறுநீருடன் ரத்தம் கலந்து போனால், மாதுளைப் பூ, கசகசா, வேப்பம் பிசின் தலா அரை டீஸ்பூன் அளவு எடுத்து நன்றாக அரைக்க வேண்டும். அதில் பாதியளவு காலையும் மீதியை மாலையும் (தேன் சேர்த்து) சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் ரத்தம் போவது சரியாகும்.

சிறுநீரில் ரத்தம்போவதை நிறுத்தும் மாதுளை!
பித்தக் கோளாறு உள்ளவர்கள் மாதுளம்பூவை எடுத்து ஒன்றிரண்டாக தட்டிப்போட்டு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்தும் அடுப்பிலிருந்து இறக்கி அதில் தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவு காலையில் மட்டும் 20 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் சரியாகும்.