கனிமொழி உடன் பொல்லான் வரலாறு மீட்புக்குழுவினர் சந்திப்பு

 

கனிமொழி உடன் பொல்லான் வரலாறு மீட்புக்குழுவினர் சந்திப்பு

ஈரோடு

ஈரோட்டில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு, மணிமண்டபம் அமைக்கக் கோரி, திமுக எம்.பி. கனிமொழியிடம் அரசியல் கட்சியினர் கோரிக்கை மனு வழங்கினர். ஈரோட்டில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் திமுக எம்.பி. கனிமொழி, பல்வேறு அரசியல் கட்சியினர் மறும் இயக்கத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கனிமொழி உடன் பொல்லான் வரலாறு மீட்புக்குழுவினர் சந்திப்பு

இந்த சந்திப்பின்போது மாவீரன் பொல்லானுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கவும், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட அறச்சலூர் கிராமம் நல்லமங்காபாளையத்தில் நினைவு சின்னம் அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார் சிலை அருகில், அம்பேர்கருக்கு சிலை அமைக்க ஆதரவு கோரியும் மனு அவர்கள் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.