தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு : அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது!

 

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு : அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது!

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு : அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு  கும்பல் ஒன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு : அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேர் கைது!

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் அருளானந்தம், பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019 பிப்ரவரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் இரண்டு ஆண்டுக்கு பிறகு மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர். கைதான திருநாவுக்கரசர், சபரி ராஜன் ,சதீஷ், மணிவண்ணன், வசந்த குமார் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.