“பொள்ளாச்சி பாலியல் வழக்கில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை தேவை” – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

 

“பொள்ளாச்சி பாலியல் வழக்கில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை தேவை” – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

திருப்பத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் நடந்த கட்சியின் பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்ற ஜவாஹிருல்லா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் அமைச்சர்களுக்கு, நெருக்கமாக இருக்கக்கூடிய அருள் ஆனந்தத்தை சிபிஐ கைது செய்துள்ளதாகவும், இன்னும் பலரை கைதுசெய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.

“பொள்ளாச்சி பாலியல் வழக்கில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை தேவை” – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐயின் விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய ஜவாஹிருல்லா, இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், திமுக இன்றைக்கு வலுவாக உள்ளதாக தெரிவித்த ஜவாஹிருல்லா, அழகிரி போன்று எத்தனை பேர் வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.