என் மகன் குற்றவாளி என நிரூபித்தால் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையை விட்டு செல்கிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன்

 

என் மகன் குற்றவாளி என நிரூபித்தால் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையை விட்டு செல்கிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என் மகன் குற்றவாளி என்று ஆதாரம் அல்லது போலிசார் நடவடிக்கை எடுத்தால் என்னுடைய 50 ஆண்டுகால பொது வாழ்க்கை விட்டுசெல்கிறேன் என முக ஸ்டாலினுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் சவால் விடுத்துள்ளார். அதுவும் ஒரு வார காலத்தில் நிரூபித்து காண்பித்துவிட்டால் சாவலை ஏற்கிறேன் என்றும் தெரிவித்தார்.

என் மகன் குற்றவாளி என நிரூபித்தால் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையை விட்டு செல்கிறேன் – பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை சபாநாயகர் ஜெயராமன், “என் மகன் குற்றவாளி என ஆதாரம் கொடுக்க முடியவில்லை என்றால் திமுக தலைவர் பதவியை விட்டு விலை மு.க ஸ்டாலின் விலக தயாரா? ஆயிரம் வீடியோ இருப்பாதாக சொன்னீர்களே? அதை நிரூபித்து காட்ட முடியுமா? தேர்தல் வந்தால் களவாணி தனம் பண்ண வந்து விடுவார்கள். முக ஸ்டாலினுக்கு ஆண்மை இருக்குமானால் சிறிய ஆதாரத்தை வெளியிட்டு பார்க்கட்டு. இப்படி அவதூறு பரப்பிக்கொண்டே இருந்தால் என் வாழ்க்கை என்னவாகும். என்னுடைய ஒரு மகனுக்கு 21 வயது அவன் எப்படி கல்லூரியில் படிப்பான். மற்றொரு மகனுக்கு 33 வயதாகிறது, அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள் அவன் எப்படி குடும்பம் நடத்துவான். இனியாவது இதுபோன்று அவதூறு பேசுவதை நிறுத்துங்கள்” எனக் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் சம்பவம். இப்பிரச்னைக்கு அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இச்சம்பவத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றன.