பச்சோந்திகளை விரட்டியடிப்போம்- பொள்ளாச்சி ஜெயராமன்
Jul 13, 2021, 04:44 IST1626131680000
கட்சிக்குள் உள்ள பச்சோந்திகளை விரட்டியடுத்துவிட்டு, நாடி வந்தவர்களை வரவேற்போம் என திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில், தேமுதிகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “புதிதாக வந்தவர்களால் அதிமுக செழித்தோகும், தகுதிக்கேற்ப உங்களுக்கு பதவிகள் வழங்கவேண்டும். புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களை நல்ல முறையில் பயன்படுத்தினால், நல்ல முறையில் செயல்படுவர்.
சட்டமன்ற தேர்தலில் சிறிய சரிவை சந்தித்துள்ளோம். அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை பற்றி கவலைப்படக்கூடாது. அவர்கள் பச்சோந்திகள். பச்சோந்திகளை விரட்டியடுத்துவிட்டு, நாடி வந்தவர்களை வரவேற்போம்” என பேசினார்.