‘மு.க அழகிரி சொன்னதை போல ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது’ – பொள்ளாச்சி ஜெயராமன்

 

‘மு.க அழகிரி சொன்னதை போல ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது’ – பொள்ளாச்சி ஜெயராமன்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் இன்று முதல் பொங்கல் பரிசாக ரூ.2,500 பணமும் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பொங்கல் பரிசு வழங்கும் விழாவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் தொடக்கி வைத்தனர்.

‘மு.க அழகிரி சொன்னதை போல ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது’ – பொள்ளாச்சி ஜெயராமன்

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ‘திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது இருக்கும் ஊழல் புகார்கள் குறித்து அவர் முதலில் பதில் சொல்ல வேண்டும். அமைச்சர்கள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. நடக்காத ஒப்பந்தங்களையும் போடாத டெண்டர்களையும் போட்டதாக சொல்லி, தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்’ என்று கூறினார்.

மேலும், முதல்வராகும் ஸ்டாலினின் கனவு பலிக்கவே பலிக்காது என்றும் அவரது அண்ணன் மு.க அழகிரி கூறியது போல ஒரு போதும் அவர் தமிழக முதல்வராக முடியாது என்று தெரிவித்தார்.