பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

 

பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில், உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கிற முழக்கத்தை முன்வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் மண்ணச்சநல்லூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி, தமிழகத்தையே அதிரவைத்த பொள்ளாச்சி வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் ஈடுபட்டுள்ளார் என்பது உறுதியாக சொல்கிறேன் என்றும் முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள் என்றும் பேசியிருந்தார். உதயநிதியின் இந்த பேச்சு, அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்!

இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்பு படுத்தி தன்னை பற்றி அவதூறாக பேசியதால் உதயநிதியிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி ஜெயராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கமாறு உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.